மதம் இனம் என்ற பெயரால் மனிதர்களை பாகுபடுத்தி பார்க்க எந்த ஞானி | The National Reform Movement Channel
மதம் இனம் என்ற பெயரால் மனிதர்களை பாகுபடுத்தி பார்க்க எந்த ஞானிகளும், எந்த காலத்திலும் கூறியதில்லை, கூறப் போவதுமில்லை. அனைத்து ஞானிகளும் தங்கள் போதனைகளை வாழ்க்கையாக கடைப்பிடித்து வாழ்ந்து சென்றார்கள். அவற்றை சடங்காக மட்டுமே பெரும்பான்மையான மக்களும் இன்று பயன்படுத்தி வருகிறார்கள். வார்த்தைகளுக்கும், வாழ்க்கைக்குமான இடைவெளி மனிதர்களை மனிதத் தன்மையிலிருந்து வெகு தூரம் பிரித்து விட்டது, பிரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே எந்த மதத்தைப் பற்றியும் ஆய்வு செய்யவும், விவாதிக்கவும், நேரமும், விருப்பமும் இல்லை. மனிதம் மேலோங்க இறைவழியில் என்றும் தொடர்ந்து பயணிப்பது மட்டுமே எமது எண்ணமும், செயலும். ஜெயசீலன் கோ